1)

கழுமர சிறுமணிக்குள்
அசையாது வாழும் கூட்டுப்புழு
வண்ணப்பருவத்தில்
காற்றேறுகையில்
கழுமரத்தையும் தூக்கிச்செல்கிறது.

 

2)

‘அழியாமலிருக்கும்
உனக்கு மட்டுந்தான்
நடந்த உண்மைகள் தெரியும்.
சொல்
தீவினைகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
எல்லா பொச்சுகளுக்கும் பொதுவா?
இல்லை
அப்ராணி பொச்சுகளை மட்டும்
உன் தலையின் வழி இறக்குவார்களா?’
எனது கேள்விகளுக்கு
தப்பித்து நகரும்
கழுமரத்தின் கழுத்தில்
கொச்சக்கயிறால்
உருவாஞ்சுருக்கிட்டு
முளைப்பாரித் தளிரில்
பிடியைக் கட்டுகிறேன்.

3)

பூமியை காந்தமாக்கி
கண்ட திசையெல்லாம்
அசைக்கிறேன்.
பேய்மண் துகள்களாக
சாய்ந்து நிமிர்ந்து ஆடுகின்றன
நிலவாழ் கழுமரங்கள்.

 

***

-முத்துராசா குமார்

 

 

‘கழுமரம்’ கவிதைத் தொகுப்பு அட்டைப்படம்.

 

புகைப்படம் – ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

 

வடிவமைப்பு – ஓவியர் மணிவண்ணன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *