நகர தாம்பத்யம்

 

சாலையில் எதிர்ப்படும்

சாக்கடைகளைக் கடக்க

விஸ்வரூபம் எடுக்கவியலாது

ஜல்லியடித்து நேரமிழப்பார்

நகர்வலம் முடிக்கக் கிளம்பிய

சுகவனேசுவரர்.

பள்ளியறையில் கற்கண்டு பாலுடன்

காத்திருப்பாள் சொர்ணாம்பிகை

கோபுர வெளிச்சம்

வானத்து நட்சத்திரம் போல்

உறைவது போல்

 

 

ஆண்கதை

 

கிளைத்தெழுந்த அங்கத்தில்

பருகி

காலூன்றி

நடை

பயில்வான்

கிளைத்தெழுந்த அங்கத்தைப்

பருகி

அடங்க

 

***

-அகச்சேரன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *