நான்

 

1.

கனவில் அடிக்கும்

இதமான வெயிலில்

குறுக்குவெட்டாகப் பறக்கும்

வண்ணத்துப்பூச்சிகள் அமர

இடை இடையே நிகழுக்கு வந்து

பரிதவிக்கும்

மொட்டைப்பாறை

 

2.

பயின்ற கவிதையின்

பழக்கமான திருப்பத்தில்

சந்தோஷமாக வழுக்கி விழும் யோகி

பிழைப்புப் பாதையின்

அநிச்சய தருணங்களில்

சீறலை மறந்த நெளியுடல்

 

3.

அழிந்த கோலத்தின்

உயிர்த்திருந்த அழகில்

யுகம் கழிந்த ஏக்கம்

பிரசவித்த ஒவ்வா இன்று

 

 

***

அந்நியமாகிவிட்ட

நடுத்தெரு பார்வையில்

நினைவுக்கு வந்திருக்குமா

 

விரல்தீண்டா

இலை உப்பைப்போல்

மூடிய

காதல்.

 

-அகச்சேரன்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *